![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ-55vk9kO-JnxSw3_pP6Ef6tF1kBdtldJepr2ky6S85QJ366N4hYDCAYzJ5Ijb-1DIFMqfGwckEVQaHZTb1wfletOjora1CCoDjpIngRjAV_Wqlmva0VH_VLf8gA-WlpSni9WLHUv3Sc/s320/illus0163.jpg)
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்
காப்புக் கரங்களால் துயர் துடை.
சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும்
ஆக்கப் பலத்தினை நீ படை.
களங்களில் நின்று கலிகளை முட்டும்
காரிகை வெல்லப்பலம் கொடு.
உளங்களை வென்று பூமகள் முன்றலில்
புலம்பெயர் பெண்ணென வளங்கொடு.
பிஞ்சினை பிய்த்தரை வஞ்சியை வதைத்தரை
வெஞ்சினம் கொண்டு அவர் நெஞ்சுடை.
நஞ்சினை அணிந்தவர் நாட்டைக் காப்பரின்
நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை.
கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள்
கர்வம் ஏற்றி எழுதட்டும்.
புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட
காலம் காட்டிய பாதையிது.
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
2 கருத்துகள்:
:) அருமை
நன்றி தூயா.
கருத்துரையிடுக