ஞாயிறு, 11 மார்ச், 2007

இலக்கணம் தேடாதீர்கள்.....என்னிடம் கிடைக்காது மனதில் எழுவது உணர்வுகளால் வார்த்தைகள் பின்ன உராயம் எழுதுகோலின் பிரசவம் இது.அந்த வகையில்....




வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



ஆற்றலுடை தொழில் வளமும்,

அறிவியல் துறை வளர்வும்,

மாற்றமுறாப் பண்பு நிறை

மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும்,

ஏற்றமுடன் தமை ஈந்த

சரித்திரத்து நாயகரை

சாற்றிவைத்து கூற்றியம்பச்

சத்தான புலமை செய்தும்,



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



காடுகளும், கழனிகளும்

கலை கொழிக்கும் கூத்துகளும்,

களங்கள் பல கண்ட – வீரக்

கதைகள் சொல்லும் ஆவணமும்,

வேழமொத்த பகை விரட்ட

வெகுண்டெழுந்த வேங்கையமும்,

வீரமுடன் பாடிப் பாடி

வெற்றி வாகை சூடியே



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



தென்னைபனை கனிவளமும்,

தேங்கு முப்பதன் செறிவும்,

கண்ணையொத்த கடற்தனமும்,

காயமாற்றும் செடி கொடியும்,

தொன்மையுறு தமிழ்மொழியும்,

தோற்ற எழில் மணல் வெளியும்,

முன்னர் ஆட்சி செய்த சான்றும்

முரசறைந்து செப்பியே



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



இலங்கு துறை கோணமலை,

எழில் கொஞ்சும் மட்டுநகர்,

முத்துபுகழ் மன்னாரும்,

முகங்காட்டும் தீவேழும்,

தலையசைக்கும் யாழ்குடாவும்,

தளத்தைக் கொண்ட வன்னிமண்ணும்,

அழகை அள்ளிச் சொரியச்சொரிய

அம்பாறைத் தங்கத் தளமும்



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



பேதமின்றி, பிரிவுமின்றி – ஓர்அன்னை

பெற்ற பிள்ளைபோல்

மும்மதத்தார் இணைந்து வாழும்

இன்ப பூமி ஈழமே!

ஆதவனாய் எழுந்த தமிழ்

ஆளும் திரு நாடிது

அணிவகுத்துத் தலைவணங்கி

எழுக! எழுக தமிழரே!



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க தமிழ் ஈழமே!

வாழ்க என்றும் வாழ்கவே!